தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மொபைல் போன் ஆப் மூலம் மகளிர் உரிமைத்தொகை பதிவு...!!

மொபைல் போன் ஆப் மூலம் மகளிர் உரிமைத்தொகை பதிவு...!!

Women's Entitlement Registration through Mobile Phone App. Advertisement

களிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்வதற்கான மொபைல் போன் ஆப்பை தமிழ்நாடு மின்னாளுமை முகாமை இயக்ககம் உருவாக்கியிருக்கிறது. இந்த ஆப் குறித்து தமிழக மின்னாளுமை முகாமை இயக்ககம் அதிகாரிகள் கூறியது :- 

மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்குவது செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி துவங்க உள்ளது. இந்த உரிமை தொகையை பெற ரேஷன் கடைகளில் விண்ணப்பம் வழங்கப்படும், அந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்து முகாம்களில் கொடுக்க வேண்டும்.

மேலும் இல்லம் தேடி கல்வி திட்டத்தை சேர்ந்த 6000 தன்னார்வலர்கள் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள் விண்ணப்ப பதிவு பணியில் ஈடுபட இருக்கிறார்கள். விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக தமிழக மின்னலுமே மின்னாளுமை முகாமை இயக்ககம் 'கலைஞர் மகளிர் உரிமை ஸ்கீம்' என்னும் பெயரில் மொபைல் போன் ஆப்பை உருவாக்கி இருக்கிறது. 

இதில் தன்னார்வலர்கள் தங்களது மொபைல் போன் எண் மற்றும் கடவுச்சொல்லை பதிவிட்டு உள்நுழைய வேண்டும். பின் புதிய படிவம் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட படிவம் என இரண்டு பிரிவுகள் திரையில் தோன்றும் அதில் புதிய படிவத்தை தேர்வு செய்து விண்ணப்பதாரரின் பெயர் மற்றும் முகவரி ஆதார் கார்ட் போன்ற விபரங்களை பதிவு செய்து சமர்ப்பிக்க வேண்டும். 

இந்த மொபைல் போன் ஆப் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடையாது. சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப நிலை குறித்தும் அதில் அறிந்து கொள்ள முடியும் தன்னார்வர்களுக்கு இந்த ஆப்பை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தமிழக மின்னாளுமை முகாமை இயக்கக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Women's Entitlement #Mobile Phone App
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story