×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவன் இறந்த சோகம்.! இரண்டு மகள்களுடன் ஓடும் ரயிலில் இருந்து குதித்த பெண்.!

சென்னை, பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், தனது 2 மகள்களுடன் திருவள்ளூரை அடு

Advertisement

சென்னை, பட்டாபிராம் பகுதியை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், தனது 2 மகள்களுடன் திருவள்ளூரை அடுத்த புட்லூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளார். பின்னர் கோவிலில் இருந்து பட்டாபிராம் திரும்பி செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு புட்லூர் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் எறியுள்ளார்.

புட்லூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர், திடீரென 2 மகள்களுடன் ஓடும் ரெயிலில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதனைப்பார்த்த சக பயணிகள் அலறல் சத்தம் போட்டு, அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

ரயிலில் இருந்து கீழே விழுந்த 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து பலத்த காயமடைந்த அவர்கள் மூவரையும் போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருவள்ளூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த பெண், தனது கணவர் இறந்த சோகத்தில் தனது மகள்களுடன் மின்சார ரயிலில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#train #suicide
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story