புது அப்டேட்.... மகளிர் உரிமைத் தொகை ₹2,500..! தமிழக அரசுக்கு பெரிய சவால்..!!!
மகளிர் உரிமைத் தொகையை ₹2,500 ஆக உயர்த்தும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், ஆண்டுக்கு ₹39,300 கோடி நிதி தேவைப்படும் என்ற கணக்கீடு தமிழக அரசுக்கு பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
தமிழக பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகை ₹2,500 ஆக உயர்த்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அதற்குத் தேவையான நிதி குறித்த கணக்கீடுகள் கவனம் ஈர்த்துள்ளன. தற்போதைய பயனாளிகள் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே ஆண்டுக்கு ₹39,300 கோடி வரை செலவாகும் என மதிப்பிடப்படுவதால், இந்த அறிவிப்பு அரசுக்கு மிகப்பெரிய நிதிச் சவாலாக பார்க்கப்படுகிறது.
மாதந்தோறும் ஆயிரக்கணக்கான கோடி செலவு
தற்போது சுமார் 1.31 கோடி பெண்கள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். இந்த எண்ணிக்கையின் அடிப்படையில், ஒருவருக்கு மாதம் ₹2,500 வழங்கப்படுமானால், அரசுக்கு மாதந்தோறும் சுமார் ₹3,275 கோடி தேவைப்படும்.
இதையும் படிங்க: மகிழ்ச்சி செய்தி! விடுபட்ட இவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை ரூ.5,000! தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!!
இதையே ஆண்டு கணக்கில் எடுத்தால், இத்திட்டத்திற்காக மட்டும் சுமார் ₹39,300 கோடி ஒதுக்க வேண்டிய நிலை உருவாகும். இதனால், இந்தத் திட்ட விரிவாக்கம் நிதி ரீதியாக மிகப்பெரிய முடிவாக கருதப்படுகிறது.
பட்ஜெட்டில் இடம் பெறுமா?
இவ்வளவு பெரிய தொகையை ஒரே திட்டத்திற்காக ஒதுக்குவது எளிதான விஷயம் அல்ல என்பதால், அதற்கான நிதி ஆதாரங்களை உறுதி செய்வதிலும் திட்டத்தை மறுசீரமைப்பதிலும் அரசு கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் வாக்குறுதிகளில் முக்கிய இடம் பெற்ற இந்த அறிவிப்பை உடனடியாக செயல்படுத்துவதற்குப் பதிலாக, பட்ஜெட் நடைமுறைகளுக்கு ஏற்ப கட்டமைக்கப்பட்ட வடிவில் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
புதிய பயனாளிகள் வந்தால் சுமை அதிகரிக்கும்
தற்போதைய பயனாளிகள் எண்ணிக்கையை வைத்தே இந்த நிதிக் கணக்கீடு உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் நிலுவையில் உள்ள புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, கூடுதல் குடும்பங்கள் திட்டத்தில் இணைக்கப்பட்டால் பயனாளிகள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதன்பின் தமிழக பட்ஜெட் மீது ஏற்படும் நிதிச் சுமையும் உயரக்கூடும் என்பதால், திட்டத்தின் இறுதி வடிவம் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குட் நியூஷ்! விரைவில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2,500.. நாளை வங்கி கணக்கில் வரும் பணம்! முதல்வர் விஜய்யின் அதிரடி அறிவிப்பு!!!