×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.. பெண் காவலர் 2 பிள்ளைகளுடன் தற்கொலை.!

மதுரையில் அதிர்ச்சி சம்பவம்.. பெண் காவலர் 2 பிள்ளைகளுடன் தற்கொலை.!

Advertisement

மதுரை மாவட்டத்தில் உள்ள ஐயர் பங்களாவில் வசித்து வந்த தம்பதியினர் சுப்புராஜ் ஜெயலட்சுமி. இந்த தம்பதியினருக்கு ராஜா என்ற மகனும், பவித்ரா என்ற மகளும் இருந்துள்ளனர். ஜெயலட்சுமி மதுரை ரயில்வே காவல் நிலையத்தில் பெண் காவலராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் திருச்சி ரயில்வே காவல் நிலையத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதனால் ஜெயலட்சுமி கடும் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஜெயலட்சுமி கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை தனது 2 பிள்ளைகளுடன் ஜெயலட்சுமி சமயநல்லூர் அருகே வந்துள்ளார்.

அப்போது தனது மகன் மற்றும் மகள் இவருடன் சேர்ந்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் இடத்திற்கு பயந்து வந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#women police #suicide #madurai #trichy #Samayanallur
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story