×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கல்லால் அடித்து கொல்லப்பட்ட கள்ளக்காதலி.! தவிக்கும் குழந்தைகள்.! பல்லாவரத்தில் பரபரப்பு!!

கல்லால் அடித்து கொல்லப்பட்ட கள்ளக்காதலி.! தவிக்கும் குழந்தைகள்.! பல்லாவரத்தில் பரபரப்பு!!

Advertisement

கள்ளக்காதல் விவகாரத்தினால் ஏற்படும் வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்லாவரம் அருகே வேறொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்த நிலையில் கல்லால் தாக்கி கள்ளக்காதலி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பல்லாவரம் பகுதியில் வசித்து வந்தவர் ஞானசித்தன். 40 வயது நிறைந்த இவர் தாம்பரம் மாநகராட்சியில் லாரி டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். மேலும் அவர் திருமணமாகாத நிலையில் அவர் அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த 33 வயது நிறைந்த பாக்கியலட்சுமி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. பாக்கியலட்சுமி திருமணமாகி விவாகரத்தான நிலையில் தனது இரு குழந்தைகளுடன் தனிமையில் வசித்து வந்துள்ளார். 

இந்நிலையில் ஜானசித்தன்- பாக்கியலட்சுமி இருவரும் அடிக்கடி தனிமைக்கு சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். மேலும் ஞானசித்தன் பாக்கியலட்சுமியை திருமணம் செய்து கொள்ள எண்ணியுள்ளார். ஆனால் இதற்கிடையில் பாக்கியலட்சுமிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பது ஞான சித்தனுக்கு தெரிய வந்துள்ளது. 

இதையும் படிங்க: வழக்கறிஞர் சரமாரியாக வெட்டிக்கொலை; சென்னையில் பரபரப்பு.! 

இதுகுறித்து அவரிடம் விசாரித்த நிலையில் அவர், நான் யாரிடம் தொடர்பில் இருந்தால் உனக்கென்ன? என கேட்டுள்ளார்.இந்நிலையில்
 இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ஞானசித்தன் அருகில் இருந்த பெரிய கல்லை எடுத்து பாக்கியலட்சுமி தலையில் ஓங்கி அடித்துள்ளார்.
இதில் பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தார். 

அதனை தொடர்ந்து பயந்துபோன ஞானசித்தன் சங்கர்நகர் காவல் நிலையம் சென்று நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து சரணடைந்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து உயிரிழந்த பாக்கியலட்சுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து தீவிர விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கள்ள காதல் விவாகரத்தால் பெண் கொல்லப்பட்ட நிலையில் அவரது இரு குழந்தைகள் தவித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வேலைக்கு சென்றவர், ஏரியில் வெட்டுக்காயத்துடன் சடலமாக மீட்பு; கண்ணீரில் உறவினர்கள்.. திருவள்ளூரில் சோகம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Murder #illegal affairs #Pallavaram
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story