×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கழுத்து அறுக்கப்பட்டு மர்மமாகக் கிடந்த தாய்.. மகன் போலீசில் புகார்!

கழுத்து அறுக்கப்பட்டு மர்மமாகக் கிடந்த தாய்.. மகன் போலீசில் புகார்!

Advertisement

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்னபட்டு. இவருக்கு ராமன் என்ற கணவனும் விக்னேஷ் என்ற மகனும் இருந்துள்ளனர். இதில் அன்னபட்டு கணவர் ராமரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதில், அன்னபட்டு நிலம் ஒன்றை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய பிற்பகல் வயலுக்கு சென்ற அன்னபட்டு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால், அன்னபட்டுவின் மகன் விக்னேஷ் தனது தாயைத் தேடி விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கே வயலில் கழுத்து அறக்கப்பட்டு அன்னபட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்னேஷ் கீழப்பழுவூர் போலீசாருக்கு தெரிவித்துள்ளார். இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் அன்னபட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ariyalur #Keezhapazhuvur #Crime #death #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story