×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணத்திற்கு முன்பே காலையில் குழந்தை பெற்ற இளம் பெண்! மாலையில் நடந்த திருமணம்!

women got child before marriage

Advertisement

சென்னை, திண்டிவனம் அருகே உள்ள கடவம்பாக்கம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்கு கோகிலா என்ற 20 வயது மகள் இருந்துள்ளார். தனியார் கல்லூரி ஒன்றில் இளங்கலை பயின்றுவரும் ஜெகநாதனின் மக்கள் கோகிலா, அதே பகுதியை சேர்ந்த பரமசிவன் என்பவரை காதலித்து வந்துள்ளார்.

இவர்களது காதல் மிக நெருக்கமானதால், இவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்துவந்தனர். அதன் காரணமாக கோகிலா கர்ப்பமானார். ஆனால் கர்ப்பமானது தெரிந்த கோகிலா, இந்த விஷயம் வீட்டிற்கு தெரிந்தால், பெரிய பிரச்சனையாகிவிடும் என்பதால், வீட்டிற்கு மறைத்து கல்லூரிக்கு சென்று வந்துள்ளார்.

இந்தநிலையில் நிறைமாத கர்ப்பிணியான கோகிலாவிற்கு கடந்த சனிக்கிழமை அன்று வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கல்லூரி மாணவிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள், குழந்தையின் தந்தை பெயரை கேட்டபோது கோகிலா திருதிருவென விழித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மருத்துவர்கள், திண்டிவனம் மகளிர் போலீசாருக்கு இதுதொடர்பாக தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோகிலாவிடம் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், காதலர் பரமசிவம் மூலம் தாயானது தெரியவந்தது. இதனையடுத்து கோகிலாவின் காதலரை அழைத்து விசாரணை நடத்தினர் அப்போது அவர், கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறினார். இதன்னையடுத்து இருவரும் போலீசார் முன்பு கோவிலில், மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#child #marriage #college girl
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story