×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

போலீஸ்காரரை பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்து கொலை செய்ய முயன்ற இளம்பெண்! அதிர்ச்சி சம்பவம்!

women fired on police

Advertisement

சென்னை திருமுல்லைவாயல் போலீஸ் குடியிருப்பைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், தமிழ்நாடு சிறப்பு காவல்படையில் பணியாற்றி வருகிறார். இவர், ஜெயா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இவர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட கருத்து வெங்கடேஷை பிரிந்து மகனுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்துள்ளார். வெங்கடேஷ், தனது மகளுடன் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். மேலும் இவர்களுக்கிடையே விவாகரத்து வழக்கு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் வெங்கடேசுக்கு, திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. அந்த பெண் அவரது கணவர் மற்றும் மகன்களை விட்டுவிட்டு வெங்கடேசுடன் கணவன்-மனைவி போல் வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் அந்த பெண் வெங்கடேசுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறி வெங்கடேஷிடம் தகராறு செய்து வந்தார். 

இந்தநிலையில் வெங்கடேஷ் மீது அதிகம் கோவம் கொண்ட அந்த பெண் நள்ளிரவில், வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து தூங்கிக்கொண்டிருந்த வெங்கடேஷ் மீது ஊற்றி, தீ வைத்துவிட்டு தப்பி ஓடியுள்ளார். இதில் உடல் முழுவதும் தீ பரவியதால் அலறி துடித்த வெங்கடேஷ், குளியல் அறைக்குள் சென்று தீயை தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தார். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, வெங்கடேசை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இதனையடுத்து வெங்கடேஷ் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தீ வைத்த அந்த பெண்ணை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#police #murder attempt
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story