தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாலையில் நடந்து சென்ற பெண்.. லாரி மோதி துடிதுடிக்க ஏற்பட்ட சம்பவம்.!

சாலையில் நடந்து சென்ற பெண்.. லாரி மோதி துடிதுடிக்க ஏற்பட்ட சம்பவம்.!

Women death in lorry accident poonamalle Advertisement

திருவள்ளூர் அருகே பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் ரேவதி. இவர் பூந்தமல்லி-பாரிவாக்கம் சாலை சந்திப்பு, பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

Bangalore highway

அப்போது அந்த வழியாக வந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து ரேவதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த ரேவதி மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் பலத்த காயமடைந்தார்.

இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் ரேவதியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரியை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bangalore highway #accident #Poonamalle #thiruvallur #Parivakkam
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story