வீட்டை சுத்தம் செய்துகொண்டிருந்த பெண்ணிற்கு காத்திருந்த பேரதிர்ச்சி! இறுதியில் நேர்ந்த சோகம்! கதறும் குடும்பத்தார்கள்!
women dead by biting snake from shoe
சென்னை கேகே நகரில் வசித்து வருபவர் பழனி. இவர் சினிமா தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் கார்பெண்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி சுமித்ரா. இந்நிலையில் சென்னை முழுவதும் கடந்த வாரம் கடுமையான மழை பெய்த நிலையில் பழனியின் வீட்டிற்குள் தண்ணீர் பெருமளவில் புகுந்துள்ளது. மேலும் அதனால் வீடு முழுவதும் குப்பையும், சகதியாக இருந்துள்ளது.
இந்நிலையில் பழனியின் மனைவி சுமித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு முழுவதும் சுத்தம் செய்துள்ளார். அப்பொழுது பாத்ரூமிற்கு அருகில் இருந்த ஷூக்களை எடுத்து வேறு இடத்திற்கு மாற்றியுள்ளார். அப்பொழுது ஷூ ஒன்றின் உள்ளே இருந்த இரண்டு அடி நீள கட்டுவிரியன் பாம்பு ஒன்று சுமித்ராவை கடித்துள்ளது. இதில் வலியால் சுமித்ரா கதறி அழுதுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சுமித்ரா உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362