×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் முடிந்த 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை... தற்கொலைக்கு கணவர் தான் காரணமா?..! போலீசார் விசாரணை..!

திருமணம் முடிந்த 3 ஆண்டுகளில் பெண் தற்கொலை... தற்கொலைக்கு கணவர் தான் காரணமா?..! போலீசார் விசாரணை..!

Advertisement

குடும்பத்தகராறு காரணமாக மனைவி தூக்கிட்டு உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசி அருகே ஆலத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர்கள் சக்திவேல்-கோகிலா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் முடிந்துள்ளது. 

கோகிலா செய்யாறு சிப்காட்டில் வேலை செய்துவரும் நிலையில், சக்திவேலுக்கும் கோகிலாவுக்கும் இடையில் குடும்ப தகராறு இருந்துவந்துள்ளது.

இந்த நிலையில் கோகிலா வேலைக்கு சென்று வீடு திரும்பிய போது, சக்திவேல் மற்றும் அவரது குடும்பத்தினர் தகராறு செய்துள்ளனர். இதனால் மிகவும் மனமுடைந்த கோகிலா யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கோகிலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோகிலாவின் மரணத்திற்கு அவரது குடும்பத்தினர் தான் காரணமா? என விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#thiruvannamalai #girl #dead #after marriage
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story