×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவன் செய்த மோசமான காரியம்!! வாட்ஸ் ஆப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட மனைவி.. பரபரப்பு சம்பவம்..

கணவன் குடித்துவிட்டு கொடுமை படுத்தியோடு, நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த மனைவி தற்கொ

Advertisement

கணவன் குடித்துவிட்டு கொடுமை படுத்தியோடு, நடத்தையில் சந்தேகப்பட்டதால் மனமுடைந்த மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. இடுவாய்பாரதிபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரது மனைவி துளசிமணி. மது போதைக்கு அடிமையான ஆனந்தகுமார் அடிக்கடி குடித்துவிட்டுவந்து தனது மனைவியுடன் சண்டை போடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்நிலையில் சமபவத்தன்றும் வழக்கம்போல் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த   ஆனந்தகுமார், தனது மனைவியை அடித்து துன்புறுத்தியதோடு, நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை தாக்கியுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த , தனது சகோதர, சகோதரிகளின் புகைப்படங்களுடன் வாட்ஸ் ஆப்பில் மிஸ் யூ என ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #suicide #Murder
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story