×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இணையதளத்தில் விளம்பரம் கொடுத்த பெண்.! 6 லட்சம் பணத்தை கொடுத்த ஏமார்ந்த வாலிபர்.!

இணையதளத்தில் விளம்பரம் கொடுத்த பெண்.! 6 லட்சம் பணத்தை கொடுத்த ஏமார்ந்த வாலிபர்.!

Advertisement

செங்கல்பட்டு மாவட்டம் பீர்க்கன்காரனை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வி என்ற பெண் குத்தகைக்கு வீடு இருப்பதாக இணையத்தில் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்நிலையில் லோகேஷ் பிரபு என்பவர் அந்த விளம்பரத்தை பார்த்து தமிழ்ச்செல்வியை தொடர்பு கொண்டு வீடு குத்தகைக்கு வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்க்கு தமிழ்ச்செல்வி, வீட்டிற்கு குத்தகை பணம்  6 லட்சம் என கூறியுள்ளார். இதனையடுத்து லோகேஷ் பிரபு ரூபாய் 6 லட்சத்தை தமிழ்ச்செல்வியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால்  தமிழ்ச்செல்வி வீட்டை குத்தகைக்கு கொடுக்காமல் வேறு ஒரு வீட்டை காண்பித்துள்ளார். இதனால் ஏமாற்றமடைந்த லோகேஷ் பிரபு இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தமிழ்ச்செல்வியையும், அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மகனையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் தமிழ்செல்வியின் கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Women #cheated #lease
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story