×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 35 வயது பெண்ணின் பதறவைக்கும் செயல்.. இறுதியில் நடந்த சம்பவம்.!

13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. 35 வயது பெண்ணின் பதறவைக்கும் செயல்.. இறுதியில் நடந்த சம்பவம்.!

Advertisement

13 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்த பெண்ணிற்கு போக்சோ சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டுகள் தண்டனை விதித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழசேவல்பட்டி அருகாமையில் ஆவணிபட்டி  பகுதியில் வசித்து வருபவர் உதயவள்ளி (வயது 35). இவரது பக்கத்து வீட்டில் 13 வயதுடைய ஒரு சிறுவன் தனது பெற்றோருடன் வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், உதயவள்ளி அந்த சிறுவனுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். 

சிறுவன் கண்டித்தும் கேட்காமல் மீண்டும் மீண்டும் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், தனது பெற்றோரிடம் இதுகுறித்து சிறுவன் கூறியுள்ளான். இதனைக் கேட்ட ஆத்திரமடைந்த சிறுவனின் பெற்றோர் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.புகாரின் பேரில் உதயவள்ளி மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில்  அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சிவகங்கை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி, உதயவள்ளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivagangai #keezhasevalpatti #boy #abused #Women #pocso
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story