கையில் மதுபாட்டிலுடன் “CM விஜய் வரணும்” என போதையில் பெண் வாக்குவாதம்.! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.!
கையில் மதுபாட்டிலுடன் “CM விஜய் வரணும்” என போதையில் பெண் வாக்குவாதம்.! கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.!
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போதையில் கையில் மதுபாட்டிலுடன் வந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த பெண் போலீசாரிடம், “முதலமைச்சர் விஜய் உடனே இங்கே வர வேண்டும், நான் அவரை பார்க்க வேண்டும்” என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்ணின் செயலால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இதையடுத்து போலீசார் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். பின்னர் அந்த பெண்ணை அங்கிருந்து அழைத்துச் சென்ற போலீசார், மேல்சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.