தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஓடும் பேருந்தில் பெண் கழுத்தறுத்து கொலை... கொடூர சம்பவம்...!!

ஓடும் பேருந்தில் பெண் கழுத்தறுத்து கொலை... கொடூர சம்பவம்...!!

Woman strangled to death in moving bus...horrific incident...!! Advertisement

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அரு​கில் உள்ள கணவாய்ப்பட்டி பங்களா பகுதியில் வசித்து வந்தவர் கோபி. திண்டுக்கல்லில் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரின் மனைவி ​தமயந்தி (42). தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

​இந்நிலையில்,  தமயந்தி நேற்று மாலை நான்கு மணியளவில் ​​​வழக்க​றி​ஞரைச் சந்திப்பதற்காக, ​தனியார் பேருந்தில் திண்டுக்கலுக்கு ​சென்றார். உலுப்பக்குடியி​லிருந்து திண்டுக்கலை நோக்கிச் ​சென்ற பஸ்சில் ​தமயந்தி ​​ஏ​றினார். அதே பஸ்சில், ராஜாங்கம் அவரின் 14 வயது மகனுடன் ஏறினார்.

​கோபால்பட்டியை அடுத்த வடுக்கப்பட்டி அருகே பஸ் சென்று கொண்டிருந்த போது, ராஜாங்கம் அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ​தமயந்தியின்​ கழுத்தில் வெட்டினார். இ​தைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியில் அலறினர். அலறல் சத்தத்தை கேட்ட ஓட்டுநர் பஸ்சை நிறுத்தினார். இதற்கிடையே ராஜாங்கம், மகனை விட்டுவிட்டு, பஸ்சில் இருந்து இறங்கி ​தப்பி ​ஓடினார்.

கழுத்தில் பலமாக வெட்டு பட்டதால்​தமயந்தி பஸ்சில் ​உட்கார்ந்திருந்த நிலையிலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த சாணார்பட்டி காவல்துறையினர், சம்பவ இடத்துக்குச் சென்று தமயந்தியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.​ ​

சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் தனிப்படை அமைத்து தப்பியோடிய ராஜாங்கத்தைத் தேடிப் பிடிக்க உத்தரவிட்டுள்ளார். மாலை நேரத்தில் பேருந்துக்குள் வைத்து நடந்த கொலைச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #Dindigul #woman #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story