நண்பரை மகிழ்விக்க டிஎஸ்பி ஆடையில் உள்ள வந்த இளம்பெண்.. ட்விஸ்ட் வைத்த ஒரிஜினல் போலீஸ்.!
ஆண் நண்பரை மகிழ்விக்க காவலர் சீருடையில் வந்த பெண் கைது செய்யப்பட்டார்.
காவல்துறையினரின் சந்தேகத்தால் போலி பெண் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
போலி அதிகாரி:
வேலூர் நகரில் உள்ள கோட்டையில், சம்பவத்தன்று இளம்பெண் ஒருவர் காவலர் சீருடையுடன் வலம் வந்தார். டி.எஸ்.பி அதிகாரி உடையில் வலம்வந்த இளம்பெண்ணிடம் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பேச்சுக்கொடுத்து விசாரிக்க, அவர் போலி அதிகாரி என்பது தெரியவந்தது.
இதையும் படிங்க: கல்லூரி மாணவியிடம் சிக்கிய அந்த பொருள்.. திடுக்கிடவைத்த வாக்குமூலம்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்கப்போகும் பிரச்சனை?
திருட்டு வழக்கில் தொடர்பு:
கைது செய்யப்பட்ட பெண்மணி சென்னையைச் சேர்ந்த உமா மகேஸ்வரி (வயது 33) என்பது தெரியவந்தது. விசாரணையில், ஆண் நண்பரை மகிழ்விப்பதற்காக பெண்மணி காவல் அதிகாரி சீருடையில் வலம்வந்து தெரியவந்தது. இவர் சென்னையில் திருட்டு வழக்கில் தொடர்பு உடையவர் என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மூதாட்டி வன்கொடுமை செய்து கொலை.. நாகப்பட்டினத்தில் பேரதிர்ச்சி சம்பவம்.!