கை ஜெயின் கேட்டு கணவர் வரதட்சணை கொடுமை.. 8 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் தாராபுரம் பெண் தற்கொலை.!
கை ஜெயின் கேட்டு கணவர் வரதட்சணை கொடுமை.. 8 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்கு பின் தாராபுரம் பெண் தற்கொலை.!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில், ரஞ்சிதா (32) என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ரஞ்சிதாவின் கணவர் கந்தசாமி (36) தொடர்ந்து வரதட்சணை கேட்டு வற்புறுத்தியதாகவும், இதனால் ரஞ்சிதா கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சாதிய பாகுபாட்டால் ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை... உடலை வாங்க மனைவி போராட்டம்.!!
இந்த சம்பவத்தில் வரதட்சணை கொடுமை கோணத்திலும் போலீசார் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.