×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது... கொதிக்கும் நீரை ஊற்றி, அரிவாளால் வெட்டி... கொடூரமாக கொன்ற மனைவி ...!!

தூங்கிக் கொண்டிருந்த கணவன் மீது... கொதிக்கும் நீரை ஊற்றி, அரிவாளால் வெட்டி... கொடூரமாக கொன்ற மனைவி ...!!

Advertisement

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் இருக்கும் தனக்கன்குளம் திருவள்ளுவர்நகர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் சர்க்கரை (51). இவர் அ.ம.மு.க.வில் திருப்பரங்குன்றம் 1-வது பகுதி செயலாளராக இருந்து வந்தார்.

இவருக்கு அன்னலட்சுமி (48) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், சர்க்கரைக்கும் அவரது மனைவி அன்னலட்சுமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவில் சக்கரை வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அன்னலட்சுமி ஒரு பாத்திரத்தில் கொதிக்க கொதிக்க இருந்த வெந்நீரை எடுத்து வந்து அவர் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் வலியால் அவர் அலறி துடித்துள்ளார்.

மேலும் அன்னலட்சுமி, சர்க்கரையின் தலையில் அங்கிருந்த பெரிய கல்லை தூக்கி வந்து போட்டுள்ளார். இதனால் நிலைகுலைந்து போயிருந்த அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சர்க்கரையின் உடலில் பல இடங்களில் வெட்டு விழுந்ததாக கூறப்படுகிறது. 

இதில் சர்க்கரை, கட்டிலிலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் இதைத் தொடர்ந்து அன்னலட்சுமி அங்கிருந்து தப்பிச் சென்றார். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின்பேரில் திருநகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

மேலும் காவல்துறையினர் சர்க்கரையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த படுகொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அன்னலட்சுமியை தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறும்போது, சர்க்கரைக்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. கள்ளக்காதலை கைவிடும்படி அன்னலட்சுமி வற்புறுத்தியதால், கணவன், மனைவி இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் அன்னலட்சுமி கணவரை கொடூரமாக கொலை செய்து இருக்கலாம்.

மேலும் சர்க்கரையை அவர் அரிவாளால் வெட்டும் காட்சியும், பின்னர் தப்பி செல்லும் காட்சியும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. என்று தெரிவித்தனர். தப்பி ஓடிய அன்னலட்சுமியை கைது செய்த பின்புதான் கொலைக்கான முழு காரணம் தெரியவரும் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil nadu #madurai #Wife killed husband #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story