×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கட்டிய கணவன் கூட இருந்தும் தீராத ஆசை! கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த கொடூரம்! நடுங்கவைக்கும் சம்பவம்

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

Advertisement

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

தேனிமாவட்டம் கடமலைக்குண்டு மேலப்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துக்காளை(42). இவருக்கும் தேனி மாவட்டம் தர்மாபுரியை சேர்ந்த கலையரசி என்ற பெண்ணிற்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் முடிந்தநிலையில் அவர்களுக்கு 11 மற்றும் 12 வயதில் இரண்டு மகன்கள் உள்ளன்னர்.

இந்நிலையில் கலையரசிக்கும் கடமலைக்குண்டு மேல்பட்டியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுபதி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அந்த பழக்கம் கள்ள காதலாக மாறியுள்ளது. இந்த உறவு குறித்து முத்துகாளைக்கு தெரியவர கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ஒரு மாதத்திற்கு முன்பு முத்துக்காளை தனது மனைவியின் ஊருக்கு சென்றுள்ளார். இதனை அடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு முத்துக்காளை தனது சகோதரருக்கு போன் செய்து, தான் மட்டும் ஊருக்கு வருவதாக கூறியுள்ளார். ஆனால் இரண்டு நாட்களாகியும் முத்துக்காளை ஊருக்கு வரவில்லை. அவரை தொடர்புகொள்ளவும் முடியவில்லை.

இதனால் சந்தேகமடைந்த அவரது சகோதரர், முத்துக்காளையின் மனைவி கலையரசியை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் முத்துக்காளை குறித்து விசாரித்துவந்தனர். இந்நிலையில் முதுகாலையின் உடல் அழுகிய நிலையில் மேல்பட்டிச்செல்லும் வழியில் உள்ள கிணறு ஒன்றில் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறை வீரர்களின் உதவியுடன் முத்துக்காளையின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே தனது அண்ணனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனது அண்ணிதான் அவரை கொலை செய்திருக்கவேண்டும் என முத்துக்காளையின் தம்பி போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளார்.

இதனை அடுத்து போலீசார் கலையரசியை விசாரித்ததில், கலையரசி தனது கள்ளக்காதலன் சேதுபதி மற்றும் அவரது நண்பர் கணேசன் ஆகியோருடன் சேர்ந்து முத்துக்காளையை அடித்து கொலை செய்து, கிணற்றில் வீசியதை ஒப்புக்கொண்டார். இதனை தொடர்ந்து போலீசார் கலையரசி மற்றும் அவரது கள்ளக்காதலன் சேதுபதி ஆகியோரை கைது செய்துள்ளனர். கணேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

கள்ளக்காதலன் மற்றும் அவரது கூட்டாளியுடன் சேர்ந்து மனைவி சொந்த கணவனை கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime #dead #Murder #illegal relationship
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story