தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அட பாவி மனுஷா நீயெல்லாம் மனுஷனா.!! பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை.! பத்ரகாளியாக மாறிய மனைவி.!

அட பாவி மனுஷா நீயெல்லாம் மனுஷனா.!! பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற தந்தை.! பத்ரகாளியாக மாறிய மனைவி.!

wife killed husband Advertisement

பெற்ற மகளை பலாத்காரம் செய்ய முயன்ற கணவனை சுத்தியலால் அடித்து மனைவி கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓட்டேரி புதிய வாழைமா நகர் பகுதியை சேர்ந்தவர் பிரதீப். 43 வயது நிரம்பிய இவருக்கு பிரீத்தா என்ற பெண்ணுடன் திருமணமாகி 20 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.

குடிபோதைக்கு அடிமையான பிரதீப் வேலைக்கு செல்லாமல் தினமும் மது குடித்து விட்டு வந்து வீட்டில் மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று இரவு 10 மணியளவில் தலைக்கேறிய போதையில் வீட்டிற்கு வந்த பிரதீப் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார்.

இதனையடுத்து நள்ளிரவில் பிரதீப் தனது பெற்ற மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். அப்போது மக்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தாய் பிரீத்தா கணவனை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு கூறியுள்ளார். ஆனால் பிரதீப் மறுப்பு தெரிவித்து மனைவியுடன் சன்டை போட்டுள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த பிரீத்தா வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து கணவர் பிரதீப் தலையில் அடித்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலிறந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பிரதீப் சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Wife #killed husband
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story