புதுமாப்பிள்ளைக்கு எப்ப பார்த்தாலும் அதே வேலையாபோச்சு.! சாப்பாட்டில் விஷம் வைத்த இளம் மனைவி.! அதிர்ச்சி காரணம்.!
அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்த கணவனை உணவில் விஷம் வைத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் காலனி மைக்கேல் பாளையம் பகுதியை சேரந்தவர் நந்தகுமார். மாவு மில்லில் வேலை பார்த்து வரும் இவருக்கு 35 வயது ஆகிவிட்டதால், பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இந்தநிலையில், இவருக்கு மைதிலி என்ற பெண்ணின் பழக்கம் கிடைத்துள்ளது.
இதையடுத்து இவர்கள் இருவருக்கும் ஏழு மாத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில், திடீரென வயிற்று வலி காரணமாக நந்தகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர் மருத்துவர், நந்தகுமாரிடம் என்ன ஆனது என்று கேட்டுள்ளார்.
மருத்துவரிடம் தான் சாப்பிட்ட சாப்பாடு கசப்பாக இருந்ததாகவும், அதில் ஏதோ பூச்சிமருந்து வாசனை இருந்ததாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தநிலையில், சிகிச்சைபலனின்றி உயிரிழந்துவிட்டார்.
இதுதொடர்பாக போலீசார் மைதிலியிடம் கிடுக்குப் பிடி விசாரணை மேற்கொண்ட போது, நந்தகுமார் மைதிலியை எந்நேரமும் பாலியல் தொல்லை செய்து வந்துள்ளார். இரவு, பகல் என டார்ச்சர் தரவும் எரிச்சலடைந்த கர்ப்பிணி மைதிலி சாப்பிட்டில் விஷம் வைத்து கொலை செய்துவிடலாம் என்று முடிவெடுத்துள்ளார்.
இந்தநிலையில் சம்பவத்தன்று, தான் வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை சாப்பாட்டில் கலந்து நந்தகுமாருக்கு கொடுத்துள்ளார் மைதிலி. அதனை சாப்பிட்டு தான் நந்தகுமார் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362