திருமணம் முடிந்து ஒரு மாதத்திற்குள் இளம் பெண்ணிற்கு ஏற்பட்ட கொடூரம்! கதறி துடித்த கணவன். நெஞ்சை உலுக்கும் சம்பவம்.
Wife died because of selfie in krishnakiri pambar dam
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் சாமி(25) என்ற இளைஞருக்கும், நிவேதா(20) என்ற இளம் பெண்ணிற்கும் ஒரு மாதத்திற்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில், கணவன் - மனைவி இருவரும் கிருஷ்ணகிரியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்னனர்.
இந்நிலையில், உறவினர்களுடன் சேர்ந்து பெருமாள் சாமியும் அவரது மனைவி நிவேதாவும் கிருஷ்ணகிரியில் உள்ள பாம்பர் அணைக்கு சுற்றிப்பார்க்க சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் அணையின் அருகில் நின்று கை கோர்த்தபடி செல்பி எடுக்க முற்சித்துள்னனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிவேதா மற்றும் அவரின் உறவினர்களான சினேகா, கனிகா மற்றும் சந்தோஷ் ஆகியோர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெருமாள் சாமி தனது உறவினர்கள் மற்றும் மனைவியின் சடலத்தை பார்த்து கதறி அழுதது அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.