×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தன்னை உயிருக்கு உயிராக நேசித்த கணவன் திடீர் மரணம்.! அழுதபடியே உயிரைவிட்ட மனைவி.! சோக சம்பவம்.!

தன்னை உயிருக்கு உயிராக நேசித்த கணவன் திடீர் மரணம்.! அழுதபடியே உயிரைவிட்ட மனைவி.! சோக சம்பவம்.!

Advertisement

சென்னை அருகே உள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 80). இவருடைய மனைவி பானுமதி (70). இவர்களுக்கு குழந்தைகள் இல்லாததால் உறவினர் ஒருவரின் ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர். 

இந்தநிலையில் ராமலிங்கம் உடல்நிலை கோளாறு காரணமாக நேற்று முன்தினம் காலமானார். தன்னை கடைசிவரை உயிருக்கு உயிராக நேசித்து வாழ்ந்த கணவரின் மறைவு பானுமதிக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கணவர் தன்னைவிட்டு பிரிந்து விட்டாரே என்ற துயரத்தில் கணவரின் உடல் அருகே அழுது கொண்டிருந்த பானுமதியும் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

இதனையடுத்து தன்னை வளர்த்து வந்த தாய்-தந்தை இருவரின் உடல்களையும் சுடுகாட்டுக்கு எடுத்து சென்று வளர்ப்பு மகன் ஜெயராமன் இறுதிச்சடங்குகளை செய்தார். கணவர் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்பத்தியது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Husband #Wife #death
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story