×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருவிழாவிலிருந்து பாதியில் திரும்பியதால் கணவன் மீது கோபம்.. தூக்கில் தொங்கிய பெண்..!

திருவிழாவிலிருந்து பாதியில் திரும்பியதால் கணவன் மீது கோபம்!,..தூக்கில் தொங்கிய பெண்..!

Advertisement

கோவையில் கணவன் அடித்ததால் மனமுடைந்த மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள அத்திப்பாளையத்தை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி கீதா (37). இவர்களுக்கு சக்திவேல் (16), ஹரீஷ் (10) என 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் கீதா, கணவர் மற்றும் மகன்களுடன் கோவில் திருவிழாவிற்காக குன்னுரில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றிருந்தார். வேலுசாமி ஊருக்கு செல்ல வேண்டும் என கூறியதால் கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இந்த பிரச்சினையில் வேலுசாமி, கீதாவை அடித்துள்ளனர், மேலும் அவரை வலுக்கட்டாயமாக கோவைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த கீதா, சம்பவத்தன்று இரவு வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் காலை வேலுசாமி கழிவறைக்கு சென்று பார்த்தபோது கீதா தூக்கில் சடலமாக தொங்கிக் கொண்டிருந்தார். தகவல் அறிந்த கோவில்பாளையம் காவல்துறையினர், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கீதா தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது தம்பி தினேஷுக்கு கோரிக்கை ஒன்றை வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளார். அதில், தனது மகன்களை நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Coimbatore #Kovipalayam #Woman Commits Suicede #Hanging #Police Enquiry
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story