×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மகள் மற்றும் பேத்திகளை பார்க்கவந்த தாய்.! கதவை திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.! பதறவைத்த சம்பவம்.!

மகள் மற்றும் பேத்திகளை பார்க்கவந்த தாய்.! கதவை திறந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.! பதறவைத்த சம்பவம்.!

Advertisement

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, ராஜிவ் நகரில் வசித்து வருபவர் முத்துராமன். இவரது மனைவி முத்துமாரி. இந்த தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தம்பதிகளுக்கிடையே குடும்ப தகராறு காரணமாக முத்துமாரி கணவனை பிரிந்து பிள்ளைகளுடன் வசித்து வந்துள்ளார். 

இந்தநிலையில் முத்துமாரிக்கும், அவரது சகோதரர் ஆண்டவர் என்பவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்துள்ளது. இது குறித்து முத்துமாரி கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து முத்துமாரி குடும்பத்திற்கு அவரது சகோதரர் ஆண்டவர் அடிக்கடி  தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை முத்துமாரியின் தாய் கோமதி, வீட்டிற்கு வந்த போது வீடு பூட்டி இருந்துள்ளது. மேலும் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து பார்த்த போது வீட்டின் முன்பகுதியில் முத்துமாரியின் மகள்கள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளனர். வீட்டின் சமையல் அறை பகுதியில் முத்துமாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மூவரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், 3 பேரும் கொலை செய்யப்பட்டுள்ளனரா அல்லது தற்கொலை செய்து கொண்டனரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#suicide #daughters
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story