×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவனை இழந்து, தனியாக வாழ்ந்த பெண்! உறவினர் கூறிய ஒத்த வார்த்தையால், மொத்தமும் இழந்து தவிக்கும் பரிதாபம்!

widow women cheated by relative

Advertisement

ஹரியானா மாநிலம் குருஷேத்திரா கௌலாப்பூர் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ரேகா ராணி என்ற சீமா ராணி. இவரது கணவர் சுஜித்குமார் இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி சாலை விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து சீமா ராணி யாருடைய துணையும் இல்லாமல் தனியாக வாழ்ந்து வந்தார். இந்நிலையில் சீமாவின் வங்கி கணக்கில் பணம் இருப்பதை அறிந்து கொண்ட அவரது உறவினரான சிஷ்பால் என்பவர் சீமாவிடம் உனது வங்கி கணக்கில் உள்ள 7 லட்சம் ரூபாயை எடுத்து என்னிடம் கொடு, நான் அதனை என் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இரட்டிப்பாக்கி உனக்கு கொடுக்கிறேன்  எனக் கூறியுள்ளார். 

இதனைக் கேட்டு ஆசையில் மூழ்கிய சீமா உடனே அவரை நம்பி தனது பணத்தை எடுத்து அவரிடம் கொடுத்துள்ளார். ஆனால் சிஷ்பால் சீமாவை ஏமாற்றி பணத்தை சுருட்டி சென்றுவிட்டார். இந்நிலையில் தான் ஏமாந்ததை உணர்ந்த சீமா இதுகுறித்து நேற்று குருசேத்திரா போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார்கள் சிஷ்பால் மீது வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#widow women #money #cheating
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story