எந்த நேரமும் ஆ., பேச்சு., சைகை.. ஆசிரியர் செய்யும் செயலா இது?.. போர்க்கொடி உயர்த்திய பெற்றோர்.!
எந்த நேரமும் ஆ., பேச்சு., சைகை.. ஆசிரியர் செய்யும் செயலா இது?.. போர்க்கொடி உயர்த்திய பெற்றோர்.!
மாணவ - மாணவிகளை அவதூறாக பேசும் ஆசிரியரை கைது செய்ய வேண்டும் என்று பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புது சூரக்குடி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த அரசு உயர்நிலைப்பள்ளியில் புதுசூரங்குடி, நடுத்தூரங்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களை சார்ந்த மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள்.
இந்த நிலையில், பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வரும் தாமோதரன் என்பவர், மாணவ - மாணவிகளை ஆபாச வார்த்தையால் திட்டுவது, ஒருமையில் பேசுவது, மாணவிகளிடம் பாலியல் ரீதியாக பேசி தொந்தரவு கொடுப்பது என இருந்த வந்துள்ளார்.
இதனால் கடுமையான அளவு பாதிக்கப்பட்ட மாணவ - மாணவிகள் தங்களது பெற்றோரிடம் விஷயத்தை கூறவே, ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளியில் பணியாற்றி வரும் கணித ஆசிரியரை கைது செய்ய வேண்டும் அல்லது பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர்.
இந்த தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் விருதுநகர் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362