×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தாய்-பாட்டி திட்டியதால் ஆவேசம்: 14 வயது சிறுவனின் விபரீத முடிவால் பெற்றோர் கண்ணீர்.!

தாய்-பாட்டி திட்டியதால் ஆவேசம்: 14 வயது சிறுவனின் விபரீத முடிவால் பெற்றோர் கண்ணீர்.!

Advertisement

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர், தாயில்பட்டி, கலைஞர் காலனியில் வசித்து வருபவர் வேளாங்கண்ணி. இவரின் மகன் செல்வம் (வயது 14). 

சம்பவத்தன்று வீட்டில் இருந்த செல்வத்தை அவரின் பாட்டி மற்றும் தாயார் திட்டி இருக்கின்றனர். இதனால் செல்வம் மனமுடைந்து காணப்பட்டுள்ளார். 

இதனிடையே, வீட்டில் இருந்த செல்வம், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை விரக்தியில் சாப்பிட்டதாக தெரியவருகிறது. இதனால் மயங்கி விழுந்துள்ளார். 

மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அவரை அழைத்துச்சென்றபோது, அவரின் உயிரிழப்பு உறுதி செய்யப்பட்டது. மேலும், அளவுக்கு அதிகமான மாத்திரைகளை எடுத்துக்கொண்டது மரணத்திற்கு காரணமாக அமைந்தது தெரியவந்தது. 

இதுதொடர்பாக வெம்பக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #death #suicide
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story