×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

15 வயது சிறுமியை பெண் குழந்தைக்கு தாயாக்கிய 24 வயது இளைஞர்; அத்தை மகனின் அத்துமீறலால் சோகம்.!

15 வயது சிறுமியை பெண் குழந்தைக்கு தாயாக்கிய 24 வயது இளைஞர்; அத்தை மகனின் அத்துமீறலால் சோகம்.!

Advertisement

 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டையை அடுத்துள்ள ஊரில் 15 வயதுடைய சிறுமி வசித்து வருகிறார். இவரின் அத்தை மகன் இளங்கோவன் (வயது 24).

சிறுமியிடம் இளங்கோவன் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி நடித்து இருக்கிறார். இதுஒருகட்டத்தில் பாலியல் அத்துமீறல் வரையில் சென்றுள்ளது. இதனால் சிறுமி கர்ப்பமடைந்து இருக்கிறார்.

சிறுமி உடல்நலக்குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில், அருப்புக்கோட்டை கோபாலபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக மாதித்தபோது, அங்கு சிறுமிக்கு பெண் குழந்தையும் பிறந்ததது.

இதனையடுத்து, குழந்தைகள் நலத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, சிறுமியை இளங்கோவன் காதலிப்பதாக முதலில் கூறியுள்ளார். 

சிறுமியும் தனது மாமாவான இளங்கோவனை காதலித்து வந்த நிலையில், காதல் என்ற வார்த்தையை பயன்படுத்தி இளங்கோவன் சிறுமியை தனிமையில் வரவழைத்து பலாத்காரம் செய்துள்ளார். 

இதனால் சிறுமி கர்ப்பமானது உறுதியானது. அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்துக்கொண்டதால் இச்சோகம் நடந்துள்ளது. இதனையடுத்து, அருப்புக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, போக்ஸோ சட்டத்தில் இளங்கோவன் கைது செய்யப்பட்டார்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Virudhunagar #Aruppukkottai #Minor Girl #baby
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story