×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி வெட்டிக்கொலை; விழுப்புரத்தில் பரபரப்பு.. வீட்டு வாசலில் நடந்த பயங்கரம்.!

#Breaking: காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி வெட்டிக்கொலை; விழுப்புரத்தில் பரபரப்பு.. வீட்டு வாசலில் நடந்த பயங்கரம்.!

Advertisement

 

நர்சிங் கல்லூரி மாணவி காதல் விவகாரத்தில் அவரின் வீட்டு அருகே வைத்து கொலை செய்யப்பட்டுள்ள பயங்கரம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி, ராதாபுரம் பகுதியை சேர்ந்தவர் தரணி. இவர் விழுப்புரத்தில் செயல்பட்டு வரும் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். 

இந்நிலையில், இன்று காலை 6 மணியளவில் மாணவி தரணி தனது வீட்டருகே மர்ம நபரால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர், குடும்பத்தினர் அங்கு விரைந்தனர். 

மாணவி நிகழ்விடத்திலேயே பலியானதால், விக்கிரவாண்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், மாணவி தரணியின் உடலை மீட்டனர். 

தரணியின் உடல் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

முதற்கட்ட விசாரணையில், கல்லூரி மாணவி தரணி காதல் விவகாரத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் நிலவும் பரபரப்பு சூழலால் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viluppuram #tamilnadu #Vikravandi #college girl #death #Murder #விழுப்புரம் #கல்லூரி மாணவி கொலை #காதல் விவகாரம்
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story