×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தேர்வில் பிட்-அடித்து சிக்கிய மாணவி: தனியார் பள்ளி நிர்வாகத்தின் கடுமையான கண்டிப்பால் தூக்கில் தொங்கிய பரிதாபம்.!

தேர்வில் பிட்-அடித்து சிக்கிய மாணவி: தனியார் பள்ளி நிர்வாகத்தின் கடுமையான கண்டிப்பால் தூக்கில் தொங்கிய பரிதாபம்.!

Advertisement

 

விழுப்புரம் மாவட்டத்தில் வசித்து வரும் 17 வயது மாணவி, அங்குள்ள தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். 

தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், மாணவி தேர்வில் பார்த்து எழுதி சிக்கிக்கொண்டதாக தெரியவருகிறது. 

இதனால் மாணவியின் பெற்றோரை அழைத்த பள்ளி நிர்வாகம், மாணவியின் செயலை கடுமையாக கண்டித்து, டிசியை கிழித்து அனுப்பிவிடுவோம் என கூறியுள்ளது. 

இது மாணவிக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தவே, அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடலை மீட்ட காவல் துறையினர், பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

மேலும், மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், 5 ஆசிரியர்களுக்கு எதிராக வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viluppuram #tamilnadu #Girl Student #suicide #விழுப்புரம் #பள்ளி மாணவி தற்கொலை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story