×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

14 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த 2 குழந்தைகளின் தகப்பன்.. கேடுகெட்டவனின் அதிர்ச்சி செயல்.!

14 வயது சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த 2 குழந்தைகளின் தகப்பன்.. கேடுகெட்டவனின் அதிர்ச்சி செயல்.!

Advertisement

திருவிழாவுக்கு சொந்த ஊர் சென்ற சிறுமியை காதல் வலையில் வீழ்த்திய நபர், தனக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறார்கள் என்ற உண்மையை மறைத்து, சிறுமியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய பயங்கரம் நடந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிறுமி, சென்னையில் உள்ள தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வருகிறார். மேற்கு முகப்பேர் பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டில் இருந்தவாறு, சிறுமி 10 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். ஆட்டோ ஓட்டுநராக சிறுமியின் தந்தை, தனது மகளை எப்பாடு பட்டாவது பெரிய அளவிலான படிப்பு படிக்க வைத்து, நல்ல நிலையில் உயர்த்த வேண்டும் என்ற வைராக்கியத்துடன் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், விழுப்புரம் அருகே உள்ள சொந்த கிராமத்தில் நடந்த திருவிழாவுக்கு தந்தை மகளை அழைத்து சென்றுள்ளார். அப்போது, அதே ஊரை சேர்ந்த சக்திவேல் என்ற வாலிபர் சிறுமியிடம் பழகி, அவரின் செல்போன் நம்பரை வாங்கி பேசி வந்துள்ளார். சக்திவேல் தனக்கு திருமணம் ஆகவில்லை, உன்னை திருமணம் செய்துகொள்கிறேன் என ஆசைவார்த்தையை அளந்துவிட்டுள்ளார். 

அறியாத பருவத்தில் 14 வயதுடைய சிறுமி சக்திவேலின் வலையில் விழுந்த நிலையில், அவ்வப்போது சென்னைக்கு வரும் சக்திவேல் சிறுமியை பல இடங்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். கடந்த 18 ஆம் தேதி சிறுமி மாயமாகவே, இதுகுறித்து நொளம்பூர் காவல் நிலையத்தில் தந்தை புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிறுமியை சக்திவேல் திருமணம் செய்ததை உறுதி செய்துள்ளனர்.


 
இதனையடுத்து, வழக்கு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவர்கள் போக்ஸோ மற்றும் கடத்தல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சக்திவேல் மற்றும் சிறுமியை தேடி வந்தனர். இந்நிலையில், சிறுமியை சக்திவேல் சொந்த ஊருக்கு அழைத்து சென்று திருமணம் செய்து, குடிசை வீட்டில் தங்க வைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் சிறுமியை மீட்டு, சக்திவேலை கைது செய்தனர். சிறுமி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், காவல் துறையினர் சக்திவேலியிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, சக்திவேலுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து 2 குழந்தைகள் இருப்பதும், சிறுமிக்கு விஷயம் தெரிந்து அவர் சண்டையிட்டதும் தெரியவந்துள்ளது. 

சிறுமியிடம் சமாதானப்பேச்சுவார்தை நடத்திய சக்திவேல், நீ இல்லாமல் என்னால் வாழவே இயலாது என மீண்டும் தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிறுமிக்கு சக்திவேல் எதோ தொல்லை கொடுக்கிறார் என்பதை உணர்ந்த சிறுமியின் தந்தை, அவரை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்திருந்துள்ளார். இதன்பின்னரே, சிறுமியை சக்திவேல் கடத்தி சென்றுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viluppuram #chennai #Love #Minor Girl #Sexual Molestation #pocso #police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story