கஞ்சா போதையில் மாணவிகளிடம் ஆபாச பேச்சு.. பள்ளி வளாகத்திலேயே தட்டிக்கேட்ட எச்.எம் மண்டை உடைப்பு.!
கஞ்சா போதையில் மாணவிகளிடம் ஆபாச பேச்சு.. பள்ளி வளாகத்திலேயே தட்டிக்கேட்ட எச்.எம் மண்டை உடைப்பு.!
சீரழிந்து வரும் இளம் தலைமுறை கஞ்சா போதையில் மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததை தட்டிக்கேட்ட தலைமை ஆசிரியரின் மண்டையை பதம்பார்த்த பயங்கரம் நடந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்டமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சேவியர் சந்திரகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இதே பள்ளியில் விக்னேஷ் என்ற மாணவர் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். கஞ்சா போதைக்கு அடிமையான விக்னேஷ் மற்றும் அவரின் நண்பர்கள், தினமும் கஞ்சா புகைத்துவிட்டு பள்ளிக்கு வருவது, பள்ளி வளாகத்திலேயே மறைவாக கஞ்சா குடிப்பது என இருந்து வந்துள்ளனர்.
சம்பவத்தன்று, கஞ்சா குடிக்கி கும்பல் போதையில் மாணவிகளிடம் ஆபாசமாக பேசி தொல்லை seithullathu இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரகுமார், அவர்களை கண்டித்து இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் தலைமை ஆசிரியரின் மண்டையை உடைத்துள்ளார். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் வீட்டிற்கு திரும்பிய நிலையில், மேற்கூறிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாக முழு காரணம் அங்கு நடைபெறும் கஞ்சா விற்பனையை காவல் துறையினர் தடுக்காததே என உள்ளூர் மக்கள் குற்றசாட்டை முன்வைக்கின்றனர். மேலும், சம்பந்தப்பட்ட மாணவரை காவல் துறையினர் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362