×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஏரி மணல் கொள்ளையை போஸ்டர் அடித்து ஒட்டிய வி.சி.க பிரமுகர் மீது தாக்குதல்.. செஞ்சி அருகே பதற்றம்..!

ஏரி மணல் கொள்ளையை போஸ்டர் அடித்து ஒட்டிய வி.சி.க பிரமுகர் மீது தாக்குதல்.. செஞ்சி அருகே பதற்றம்..!

Advertisement

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி, மீனம்பூர் கிராமத்தில் இருக்கும் ஏரியில் மணல் கொள்ளை நடந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பாக உள்ளூர் வி.சி.க பிரமுகர் போஸ்டர் அடித்து ஒட்டியதாக தெரியவருகிறது. 

மணல் எடுப்பது ஊராட்சி மன்ற தலைவரின் மறைமுக ஆதரவோடு, அவரின் மகனால் மேற்பார்வையிடப்படுவதாக தெரியவருகிறது. போஸ்டர் விவகாரம் மணல் திருடும் தரப்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதனையடுத்து, ஊராட்சி மன்ற தலைவரின் மகன் மற்றும் அவர் தரப்பு ஆதரவு நபர்கள், மணல் கொள்ளை தொடர்பாக போஸ்டர் அடித்து ஒட்டியவரின் காரை இடைமறித்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த விஷயம் தொடர்பான வீடியோ வெளியாகி இருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Viluppuram #Gingee #Vck #police #tamilnadu #Lake Sand Smuggling
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story