×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறல்... SI மீது பாய்ந்த நடவடிக்கை.!

புகார் அளிக்க வந்த பெண்ணிடம் அத்துமீறல்... SI மீது பாய்ந்த நடவடிக்கை.!

Advertisement

தூத்துக்குடி மாவட்டத்தில் புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட எஸ்ஐ மீது  நடவடிக்கை எடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சார்ந்த பெண் புகார் கொடுப்பதற்காக அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று இருக்கிறார். அவரது புகாரை பெற்றுக் கொண்ட துணை ஆய்வாளர் சுதாகர் புகார் சம்பந்தப்பட்ட தகவல்களை தெரிவிப்பதற்காக அந்த பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் போன் செய்து அந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.அந்தப் பெண் பேச மறுப்பு தெரிவித்த போதும் மிரட்டும்  தோனியில் பேசி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தொல்லைகளை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் எஸ்ஐ மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரைத் தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கிய தமிழ்நாடு காவல்துறை  விளாத்திகுளம் எஸ்ஐ சுதாகரை ஆயுதப் புடைக்கு மாற்றியது. மேலும் அவருக்கு கடும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் எஸ்ஐ ஈடுபட்ட சம்பவம்  அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #thuthukudi #Vilathikulam #sitransfer #sexualabuse
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story