எனக்கு அவன் தான் வேணும்.... நீ வேணாம்! கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி போட்ட மாஸ்டர் பிளான்! தூக்க மாத்திரை முதல் கழுத்து நெரிப்பு வரை.... இறுதியில் போட்ட பலே நாடகம்! அதிர்ச்சி சம்பவம்!!!
வேலூரில் கணவரை தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற மனைவி மற்றும் கள்ளக்காதலன் கைது. காவல்துறை விசாரணையில் கொலை திட்டம் வெளிச்சம்.
வேலூர் மாவட்டத்தில் கணவரை தூக்க மாத்திரை கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவி மற்றும் அவரது கள்ளக்காதலன் சேர்ந்து திட்டமிட்டு இந்தக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடுகத்தூர் அருகே மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மனிஷா, பெங்களூருவில் கட்டிடத் தொழிலாளியாக இருந்த கிருஷ்ணமூர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக மனிஷாவுக்கும் தர்மபுரியைச் சேர்ந்த அன்பழகனுக்கும் இடையே கள்ளக்காதல் உருவானது.
இந்த உறவை அறிந்த கிருஷ்ணமூர்த்தி மனைவியை கண்டித்தார். இதையடுத்து அவர் வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து மது அருந்தி அடிக்கடி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்பத்தில் பதட்டம் அதிகரித்தது.
இதையும் படிங்க: ஊரு விட்டு ஊரு போய் கணவனை கொள்ள பக்கா பிளான் போட்ட மனைவி! மயங்கி விழுந்து கணவன்..... திடுக்கிடும் சம்பவம்!
தூக்க மாத்திரை கலந்த உணவு... பின்னர் கொலை
தகவலின்படி, மனிஷா இந்த பிரச்சினையை அன்பழகனிடம் பகிர்ந்துள்ளார். அதன்பின் இருவரும் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை கொல்ல திட்டமிட்டனர். திட்டப்படி, அன்பழகன் கொடுத்த தூக்க மாத்திரைகளை மனிஷா கணவரின் உணவில் கலந்து கொடுத்துள்ளார்.
மயக்கமடைந்த நிலையில் இருந்த கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு வந்த அன்பழகன் மற்றும் அவரது நண்பர் சுப்பிரமணி, சேர்ந்து அவரது கழுத்தை இறுக்கிக் கொலை செய்தனர். பின்னர், அவர் ரத்த வாந்தி எடுத்து இறந்துவிட்டதாக மனிஷா நாடகமாடியதாக போலீஸ் கூறுகிறது.
தந்தையின் புகாரில் வெளிச்சத்துக்கு வந்த உண்மை
கிருஷ்ணமூர்த்தியின் மரணம் சந்தேகத்துக்குரியதாக இருப்பதாக அவரது தந்தை போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கொலை திட்டம் முழுமையாக வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து மனிஷா, அன்பழகன் மற்றும் சுப்பிரமணி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.