×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எங்க அப்பா வாழ்ந்து வந்த காட்டில் பணப் புதையல் இருப்பது உண்மைதான்.! அடித்து சொல்லும் சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள்.!


சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி, சத்தியமங்கலம் வனப்பகுதியில், புதையல் இருப

Advertisement


சந்தனக் கடத்தல் வீரப்பன் மகள் விஜயலட்சுமி, சத்தியமங்கலம் வனப்பகுதியில், புதையல் இருப்பது உண்மை தான் என்று கூறியுள்ளார்.

சத்தியமங்கலம் காட்டில் வாழ்ந்து கொண்டு தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளுக்கு சவாலாக திகழ்ந்த வீரப்பன் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் இறந்தாலும் கூட இன்றும் வீரப்பன் பற்றி பரவலாக பேசப்படுகிறது. இந்நிலையில் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி 'மாவீரன் பிள்ளை' என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இத்திரைப்படத்தை கே.என்.ஆர். ராஜா என்பவர் திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். வீரப்பனின் மகள் விஜயலட்சுமி, முதல் முறையாக நடித்துள்ள நிலையில், இந்த திரைப்படம் இந்த மாத இறுதியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இத்திரைப்படத்தின் இயக்குனரும், நடிகை விஜயலட்சுமியும் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது விஜயலட்சுமி கூறுகையில், உதவும் குணம் கொண்ட வழக்கறிஞராக திரைப்படத்தில் நடித்திருப்பதாகவும், நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். மேலும் எங்க அப்பா வாழ்ந்து வந்த வனப்பகுதியில் பணப் புதையல் இருப்பது உண்மைதான் என்று கூறினார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#veerapan daughter #Maaveeran pillai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story