×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணமாகி ஒரு மாதத்திற்குள்ளே இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம்- வெளியான அதிர்ச்சித் தகவல்!

vallur-young girl died

Advertisement

வேலூர் மாவட்டத்தின் வாணியம்பாடியை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் தீபிகா (25) என்பவருக்கும் நவீன்குமார் என்பவருக்கும் கடந்த 6 தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் கணவர் வீட்டில் சில நாட்கள் வசித்த தீபிகா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது தாய் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில் அவர் திடீரென தூக்குப் போட்டுக் கொண்டார்.

அப்பொழுது  வெளியில் சென்ற குடும்பத்தினர் வீடு திரும்பியபோது, தீபிகா தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனே அவரை வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தீபிகா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறி உள்ளனர். 

இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி ஒரு மாதத்திற்குள் தீபிகா தூக்கிட்டு கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vallur #young girl #died
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story