×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஹிஜாப் விவகாரம்: ஆடை என்பது மானம்.... ஹிஜாப் சர்ச்சை குறித்து வைரமுத்து என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

ஹிஜாப் விவகாரம்: ஆடை என்பது மானம்.... ஹிஜாப் சர்ச்சை குறித்து வைரமுத்து என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!

Advertisement

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப் புராவில் ஒரு கல்லூரியில் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது மாநிலம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 பள்ளியின் சீருடையை மட்டுமே அணிந்து வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும், அவர்கள் ஹிஜாப் அணிந்து வருவதால், அவர்களை எதிர்த்து மற்ற மாணவிகள், மாணவர்கள் காவி சால்வை அணியும் போராட்டம் நடத்துகின்றனர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், 'கல்வியின் நோக்கங்களுள் ஒன்று பிரிந்துகிடக்கும் சமூகத்தை ஒருகூரையின் கீழ் ஒன்றுபடுத்துவது; ஒன்றுபட்ட சமூகத்தை இரண்டுபடுத்துவது அல்ல ஆடை என்பது மானம்; எந்த ஆடை என்பது உரிமை இரண்டையும் பறிக்க வேண்டாம் இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார். இஸ்லாம் என்பது இந்தியாவில் தான் சிறுபான்மை ஒடுக்க வேண்டாம் ' என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#hijab #vairamuthu
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story