×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொழிலதிபரின் 8 வயது மகன் கடத்தி கொலை?.. சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்.!

தொழிலதிபரின் 8 வயது மகன் கடத்தி கொலை?.. சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்.!

Advertisement

 

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி, கிச்சுடி பஜார் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குப்தா. இவர் தொழிலதிபர் ஆவார். இவருக்கு 8 வயதுடைய ராஜ் குப்தா என்ற மகன் இருக்கிறார்.

நேற்று முன்தினம் சிறுவன் மாயமான நிலையில், பதறிப்போன தந்தை மகனை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இதனால் அங்குள்ள தருண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுவனின் சடலம் அங்குள்ள காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட 8 அடி ஆழமுள்ள பள்ளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

சிறுவன் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் தென்பட்டு இருக்கின்றன. இதனால் சிறுவனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Uttar pradesh #ayodhya #Business man
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story