தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தீராத வயிற்று வலி.. தாங்க முடியாமல் பெண் எடுத்த விபரீத முடிவு.!

தீராத வயிற்று வலி.. தாங்க முடியாமல் பெண் எடுத்த விபரீத முடிவு.!

Unresolved stomach pain.. A tragic decision made by a woman who could not bear it!! Advertisement

கடலுார் அடுத்த சோனாங்குப்பத்தில் செல்வமணி தனது மனைவி ஜெயமாலாவுடன் வசித்துள்ளார். இந்நிலையில் ஜெயமாலாவிற்க்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு அதனால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று ஜெயமாலாவிற்க்கு வயிற்று வலி அதிகமாக இருந்துள்ளது. இதனால் ஜெயமாலா தன் கணவரிடம் தன்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். அதற்கு செல்வமணி மீன் பிடித்துவிட்டு வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதாக கூறிவிட்டு கடலுக்கு சென்றுள்ளார்.

Unresolved stomach pain

இதனையடுத்து ஜெயமாலாவிற்கு வலி அதிகமானதால் அதனை தாங்க முடியாமல் மனமுடைந்து வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் மீன் பிடித்துவிட்டு வீட்டிற்கு வந்த செல்வமணி, ஜெயமாலா தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து கடலுார் துறைமுகம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பின் அங்கு விரைந்து வந்த காவல் துறையினர் ஜெயமாலாவின் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து கடலூர் துறைமுகம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Unresolved stomach pain #Women sucide #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story