×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நெல்லையில் பரபரப்பு.. கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்த மர்ம நபர்.!

நெல்லையில் பரபரப்பு.. கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்த மர்ம நபர்.!

Advertisement

நெல்லை அருகே கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்த மர்ம நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்த நவலடி ஊராட்சியில் கோடா விளை கடற்கரை கிராமம் உள்ளது. இதில் உள்ள மஸ்தான் பள்ளிவாசலின் இடதுபுற கடற்கரையில் இருந்து சுமார் 25 முதல் 30 வரை உள்ள வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு சடலமாக கிடந்துள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உயிரிழந்து கிடந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே யார் என்பது தெரிய வரும் என போலீசார் கூறியுள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thirunelveli #Crime #Thisayanvilai #Investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story