அடுத்து நாமதான், போர்க்குணத்தை வெளிப்படுத்துவோம் - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!
அடுத்து நாமதான், போர்க்குணத்தை வெளிப்படுத்துவோம் - உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!
மாநில உரிமைகளை மத்திய அரசு பறிக்க நினைத்தால் போர்க்குணத்தை அது வெளிப்படுத்தும் என உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ பேசினார்.
சென்னையில் உள்ள தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் முத்துவேல் கருணாநிதி எனும் நான் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நூலினை சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ உதயநிதிஹி ஸ்டாலின் வெளியிட்டார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதிப்பை பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் நக்கீரன் கோபால், இயக்குனர் கரு. பழனியப்பன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வைத்து உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "பெரியார், அண்ணா, கலைஞரின் கலவையாக மு.க ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சி செய்கிறார். எதிர்க்கட்சியை சேர்ந்த பாஜகவினர் கருணாநிதியை விட மு.க ஸ்டாலின் ஆபத்தானவர் என ஒப்புதல் கொடுத்துள்ளார்கள்.
திராவிட சக்திகளை அழிக்க நினைக்கும் நபர்களுக்கு இது அவர்களின் வாயால் கிடைத்த மிகப்பெரிய பாராட்டு ஆகும். அடுத்த ஆட்சியையும் திமுகதான். அதனை யாராலும் தடுக்க இயலாது. முதல்வரின் நல்லாட்சியை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். திமுகவின் போர்க்குணம் என்றுமே குறைந்தது இல்லை. மத்திய அரசு மாநில அரசின் உரிமையை பறிக்க நினைத்தால் திமுகவின் போர்க்குணம் தெரியவரும்" என்று பேசினார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362