×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மீண்டு வா சுஜித்! ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தைக்காக உலகமே பிரார்த்தனை!

Two years old baby boy fell down into bore well in trichy

Advertisement

திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியை அடுத்து உள்ள நடுகாட்டுப்பட்டி என்னும் கிராமத்தில், வீட்டின் பின்புறம் விளையாடிக்கொண்டிருந்த சுஜித் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை அருகில் இருந்த 26 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இந்த சம்பவம் நேற்று மாலை 5.45 மணியளவில் நடந்த நிலையில் கடந்த 7 மணி நேரமாக மீட்பு பணிகள் நடந்துவருகிறது.

மதுரையை சேர்ந்த மணிகண்டன் என்பவர் கண்டுபிடித்த கருவியின் மூலம் மீட்பு பணிகள் நடைபெற்றுவருகிறது. கயிறு மூலம் கையில் சுருக்கு போடப்பட்டு குழந்தையை மீட்கும் பணி தாமதமாகிவருவதால் வேறுவழி மூலம் குழந்தையை மீட்க மீட்பு குழுவினர் போராடிவருகின்றனர்.

இந்நிலையில் ஆழ்துளை கிணறு உள்ளே குழந்தை நலமுடனும், தைரியமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும், குழந்தையிடம் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பேச்சு கொடுத்துவருகின்றனர்.

மேலும், கடந்த 7 மணி நேரமாக நடக்கும் இந்த போராட்டத்தில் சுஜித் பத்திரமாக மீட்கப்பட்ட வேண்டும் என உலகமே பிரார்த்தனை செய்துவருகிறது. மீண்டு வா சுஜித் என வலைதளவாசிகள் ட்விட்டரில் #SaveSujith என்ற ஹாஸ் டாக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Save Sujith #SaveSujith #bore well
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story