அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் இலவசம்..! தமிழக அரசு உத்தரவு..!
Two free mask for all ration card holders
ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா இரண்டு முகக்கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் தீவிரமாக போராடிவருகிறது. கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற, கொரோனா பரவலை தடுக்க பொது இடங்களில் முகக்கவசம் அணிவது அவசியம் என்று வலியுறுத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தமிழக மக்களுக்கு விலை இல்லாத முகவசங்கள் வழங்கப்படுவது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தமிழக முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தநிலையில், இன்று விலையில்லா முகக்கவசம் வழங்குவதற்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவுப்படி குடும்ப அட்டையில் பெயர் உள்ள நபர்களுக்கு, மீண்டும் பயன்படுத்தும் வகையில் தலா இரண்டு முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக 13 கோடியே 48 லட்சம் முகவசங்கள் கொள்முதல் செய்வதற்காக வேலைகள் நடந்துவருவதாகவும் முதலவர் அறிவித்துள்ளார்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362