×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்ணை கட்டிப்போட்டு தவெக நிர்வாகி அதிர்ச்சி செயல்.. கைது செய்த போலீஸ், தலைமை எடுத்த நடவடிக்கை.! 

பெண்ணை கட்டிப்போட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகி கைது செய்யப்பட்டார்.

Advertisement

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உட்பட 3 பேர் திருட்டு வழக்கில் கைதாகி இருக்கின்றனர். 

நகைகள் மாயம்: 

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டி பகுதியில் வசித்து வரும் பெண் ஒருவரை கட்டிப்போட்டு, அவரின் வீட்டில் இருந்த 21 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்த விஷயம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். 

இதையும் படிங்க: மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண் கர்ப்பம்.. தவெக நிர்வாகி கைது.. நாமக்கல்லில் ஷாக்.!

தவெக நிர்வாகி: 

விசாரணையில், பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தவெக நிர்வாகி கைது செய்யப்பட்டார். அதாவது, தவெக நிர்வாகி சரவணகுமார், விருதுநகர் மாவட்ட இளைஞரணி அளவில் பொறுப்பில் இருந்துள்ளார். 

கைது: 

இவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதைத்தொடர்ந்து, அவரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். இவருடன் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசியல்கட்சி நிர்வாகி கைது நடவடிக்கைக்குப்பின், அக்கட்சியின் தலைமை சரவணகுமாரை பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிட்டது. 

இதையும் படிங்க: நண்பருடன் பேசிய பெண்ணை தனியே அழைத்துச்சென்று பாலியல் அத்துமீறல்.. காவலர் கைது.. கோவையில் ஷாக்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Crime news #TVK #TN politics #Virudhunagar
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story