எம்.ஜி.ஆரின் ஆசைப்படி தமிழகத்தின் 2-வது தலைநகராக திருச்சியை அறிவிக்க வேண்டும்! அமைச்சர் வலியுறுத்தல்!
trichy will be second capital
திருச்சியை 2-வது தலைநகராக அறிவிக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டியளித்துள்ளார். முதல்வர், துணை முதல்வரிடம் மன்றாடி திருச்சியை 2-வது தலைநகராக்க முயற்சி எடுப்போம் என கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், திருச்சி மாவட்டத்தை 2-வது தலைநகராக மாற்ற வேண்டும். ஆசியாவிலேயே சிறந்த ரயில் போக்குவரத்து, தொழிற்சாலைகள், எல்லா நிலையிலும் தண்ணீர் பஞ்சமே இல்லாத மாவட்டம் திருச்சி மாவட்டம். இதனால் தான் எம்.ஜி.ஆர் திருச்சியை தலைநகர் ஆக்க வேண்டும் என விரும்பினார்.
இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பேசி எம்.ஜி.ஆரின் கனவு திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் அமைச்சராக இருந்த திருநாவுக்கரசர் திருச்சியை 2-வது தலைநகராக்க கோரிக்கை எழுப்பியுள்ளார்.
எம்.ஜி.ஆரின் விருப்பத்தையும் தாண்டி அமைச்சர் உதயகுமார் மற்றும் செல்லூர் ராஜூ ஆகியோர் மதுரையை 2-வது தலைநகராக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் தற்போது திருச்சியை அறிவிக்க வேண்டும் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் மற்றும் திருநாவுக்கரசர் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362