×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கோழிக்கழிவில் குருணை மருந்து வைத்து, 18 நாய்கள் கொலை - திருச்சி அருகே அதிர்ச்சி.!

கோழிக்கழிவில் குருணை மருந்து வைத்து, 18 நாய்கள் கொலை - திருச்சி அருகே அதிர்ச்சி.!

Advertisement

18 நாய்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடந்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

திருச்சி மாவட்டத்தில் உள்ள எடமலைப்பட்டிபுதூர், கிருஷ்ணாபுரம் காலனியில் இருக்கும் நாய்கள் ஒவ்வொன்றாக தெருவில் சுருண்டு விழுந்துள்ளது. மேலும், சில நாய்கள் இரத்த வாந்தி எடுத்து இறந்துள்ளது. 

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், சமூக விரோதிகள் கோழிக்கழிவில் குருணை மருந்தை கலந்து வைத்து நாய்களை கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர். மொத்தமாக 18 நாய்கள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன.

உயிரிழந்த நாய்களின் உடலை சாப்பிட்ட சில காகங்களும் உயிரிழந்துவிட்ட நிலையில், நாயின் உடலில் விஷம் ஏறியதால் அதனை சாப்பிட்ட காகமும் உயிரிழந்துள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#trichy #Edamalaipatti Pudur #tamilnadu #Street dogs #death #police
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story