தோழிக்கு பிறந்தநாள் கேக் வெட்ட கடற்கரைக்குச் சென்ற சிறுவர்கள்.! திடீரென வந்த அலையால் பரிதாபமாக போன உயிர்.!
சென்னையில் தோழியின் பிறந்தநாளை கொண்டாட சென்ற போது, கடல் அலையில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவரின் மகன் தருண் 6-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். அதே பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஜோசப் உட்பட 5 பேர் தங்களின் சகதோழியான பூஜா என்ற சிறுமியின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கடல் பகுதிக்கு சென்று கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.
அப்போது ஆரோக்கியராஜ் என்பவரின் மகன் தருண் மற்றும் ஜோசப் ஆகிய 2 பேர் மட்டும் அங்குள்ள கடலில் குளித்து விளையாடியுள்ளனர். அப்போது திடீரென தோன்றிய ராட்சத அலை அவர்கள் 2 பேரையும் கடலுக்குள் அடித்து இழுத்துச் சென்றது. இந்தநிலையில் குளித்துக்கொண்டிருந்த அவர்கள் இருவரும் திடீரென காணாமல் போனதால் அவர்களின் சகநண்பர்கள் அலறல் சத்தம் போட்டுள்ளனர்.
அவர்களது சத்தம் கேட்டு ஓடிவந்த அருகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், சிறுவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கபட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீனவர்களுடன் படகில் சென்று மாயமான சிறுவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது கடலுக்குள் மிதந்த ஜோசப்பின் சடலத்தை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். மேலும் கடலுக்குள் மாயமான தருணை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற இணையதளங்களை உருவாக்கிட, அல்லது உங்களுக்கு தேவையான இணையதளங்களை வடிவமைத்துத்தர எங்களை தொடர்புகொள்ளுங்கள்.
Need Softwares for your business? Please contact us / WhatsApp
+918438873362